1. Home
  2. தமிழ்நாடு

ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு..!

Q

தி.மு.க., அரசில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. அண்மையில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இவர் பெண்கள் குறித்தும், சைவம், வைணவத்தை அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பேச்சு அருவருக்கத்தக்கதாக, காதில் கேட்கவே முடியாத ஒன்றாக உள்ளது.
நாராச நடையில் ஆபாசமாக அமைச்சர் பேசியதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமைச்சரின் ஆபாச பேச்சு பெண்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் பொன்முடியின் பேச்சிற்கு, தி.மு.க., எம்.பி., கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது'' என குறிப்பிட்டுள்ளார்.
பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை (துணை பொதுச்செயலாளர்) பறித்து தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பதவி பறிப்பு அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் வெளியாகும்;ஆனால் இன்றைய பதவி பறிப்பு அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் பெயரில் வெளியாகியுள்ளது. இது தி.மு.க., தலைமைக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாக கட்சி நிர்வாகிகளும், நெட்டிசன்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like