1. Home
  2. தமிழ்நாடு

நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மாட்டேன்- அமைச்சர் பொன்முடி அதிரடி..!

1

இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,சுதந்திர போராட்ட வீரர் டாக்டர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை ஏற்கவில்லை.அதனால் நாளை நடைபெற உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ள மாட்டேன்.

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் உள்ளார். அவருக்கு ஏன் டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது என்ற காரணத்தை ஆளுநர் கூறமுடியுமா?

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு பேசினார் 

Trending News

Latest News

You May Like