மீண்டும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடி..!

விடுதலைப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்காத ஆளுநரைக் கண்டித்து, மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை
இந்த நிலையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொள்ள இருக்கும் நிலையில் இந்த விழாவிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வரை அவர் அவர் எந்த ஒரு பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.