1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!

1

கண்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை சிறப்பு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் உள்ள கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு (சிட்கோ) சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் மா சுப்பிரமணியன் அபகரித்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் அரசு நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தனது மனைவியுடன் வரும் 23ஆம் தேதி நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருவரும் மே 23 ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராகாவிட்டால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனவும் சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like