தீவிர புயலாக வலுவடைந்தது 'மிக்ஜான்'..! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்தபடி மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் கிட்டதட்ட 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும்
எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆதலால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் அவசியம் இல்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.