1. Home
  2. தமிழ்நாடு

நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்..!

1

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை நாளை (15-08-2025) பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like