1. Home
  2. தமிழ்நாடு

வெளியான மெகா சர்வே முடிவு : 33 சதவீதம் பேர் திமுக ஆட்சி மீது அதிருப்தி..!

1

தமிழகத்தில் வரும் 2026ல் மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்க தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை அவரது கட்சி புறக்கணித்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. விஜய் கட்சி தனித்து போட்டியிடுகிறதா? இல்லாவிட்டால் கூட்டணி அமைத்து களமிறங்குகிறதா? என்பது இன்னும் முடிவாகவில்லை.

இருப்பினும் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் கட்சி மாநாட்டில் தனது தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளை ஏற்பதாக அறிவித்துள்ளார். இதனால் 2026 சட்டசபை தேர்தல் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்களிடம் ஆதரவு எப்படி உள்ளது? என்பது பற்றி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டது.

மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 தொடங்கிய சர்வே 21 நாட்கள் நடந்தது. இந்த சர்வேயை பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என்று 110 பேர் மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் அந்த சர்வேயின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் தற்போது தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி மீது அதிருப்தி இருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு 33 சதவீதம் பேர் அதிருப்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் அதிருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் 27 சதவீதம் பேர் ஓரளவு அதிருப்தி என்றும், 10 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர். அதன்படி பார்த்தால் சர்வேயில் பங்கேற்றவர்களில் அதிகமானவர்கள் (33 சதவீதம் பேர்) திமுக மீது அதிருப்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like