இந்த 2 நாட்கள் இறைச்சி கடைகள் இயங்காது..!
இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16.01.2020 (வியாழக்கிழமை) அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.இதேபோல், ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினமான வரும், 16ம் தேதியும், வள்ளலார் தினமான வரும், 25ம் தேதியும் ஆடு, மாடு மற்றும் கோழி வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகளை மூட வேண்டும்.
அன்றைய தினம் மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் மாடு அறுவைமனைகள், மாநகராட்சியின் கீழ் இயங்கும் இறைச்சிக் கடைகளும் செயல்படாது.
உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.