உங்கள் தலைமை மாநிலத்திற்கு செழிப்பை கொண்டு வரட்டும் - சந்திரபாபு நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோ பாஜக பவன் கல்யாண் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது. இந்த நிலையில் பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து ஆந்திராவின் முதலமைச்சர் ஆக சந்திரபாபு நாயுடு பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில் 4வது முறையாக ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," மாண்புமிகு சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ளார். உங்கள் தலைமை மாநிலத்திற்கு செழிப்பையும் நலனையும் கொண்டு வரட்டும். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையே இரு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காகவும், பிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்." என கூறியுள்ளார்.
Hearty wishes to Hon'ble @ncbn garu on being sworn in as the Chief Minister of Andhra Pradesh for the fourth term. May your leadership bring prosperity and welfare to the state. Looking forward to strengthening the bond and cooperation between Andhra Pradesh and Tamil Nadu for… pic.twitter.com/3Qei93NbkP
— M.K.Stalin (@mkstalin) June 12, 2024