மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f702f2c119a7186506e82a69fbce4368.jpg?width=836&height=470&resizemode=4)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற 3-ம் தேதி பாஷ்யகர்ல உற்சவம் தொடங்குகிறது. 4-ம் தேதி சர்வ ஏகாதசி, 10-ம் தேதி அட்சய திருதியை, 12-ம் தேதி பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம், 22-ம் தேதி நரசிம்ம ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்க மாம்பா ஜெயந்தி, 23-ம் தேதி அன்னமாச்சாரியா ஜெயந்தி, கூர்ம ஜெயந்தி ஆகியவை தொடர்ந்து நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று முன்தினம் 86, 241 பேர் தரிசனம் செய்தனர். 31,730 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.