'MAY DAY' அறிவித்து அவசரமாக தரையிறக்கம்..!
வாஷிங்டனில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க இன்ஜின் பழுதானது. இதனை கண்டறிந்த விமானிகள், வாஷிங்டன் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், விமானிகள் 'MAY DAY' அறிவித்து அவசரமாக மீண்டும் வாஷிங்டன் விமான நிலையத்திலேயே விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.