1. Home
  2. தமிழ்நாடு

மே 6ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை..!

1

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை தேர்த் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த் திருவிழா வெகுவிமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இவ்விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மே.6) காலை சித்திரைத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6-ம் தேதி உள்ளூர் விடுமுறையை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த தேரோட்டத்தையொட்டி விடப்படும் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 29-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like