1. Home
  2. தமிழ்நாடு

இந்த தேதிய குறிச்சு வச்சுக்குங்க..சென்னையில் மிக கனமழை பெய்யும்..!

1

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் மீண்டும் வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அடுத்த சுற்று மழை எங்கு இருக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, வடகிழக்கு பருவமழை டிசம்பர் 10 முதல் 25ஆம் தேதி இடைப்பட்ட இரண்டு வாரங்களில் மீண்டும் தீவிரமடைந்து அடுத்தடுத்து சுற்றுகளில் தமிழகத்தில் மழை பொழிவை கொடுக்கும். குறிப்பாக நான்காம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15 ஆம் தேதி காலை வரை நான்கு நாட்கள் நீடித்து தமிழகத்தில் மழையை கொடுக்கும்.

இந்த வரக்கூடிய சுற்றுகளில் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்தமிழகம், உள் மாவட்டங்கள் ஆகியவற்றில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக வடகடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பிரதான மழைப்பொழிவு இருக்கும். ஒருசில இடங்களில் குறிப்பிடத்தக்க அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தெற்கு மத்திய வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை நிலவரப்படி தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் நிலவி வருகிறது. இது இன்று நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 11ஆம் தேதி இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியை அடைய உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியை அடையும் பொழுது இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தொடர்ந்து வட தமிழகம் மற்றும் டெல்டா கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். டிசம்பர் 11ஆம் தேதி மிக மெதுவாக நகரும் இந்த இந்த சலனம் புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

அதே நேரம் டிசம்பர் 10 ஆம் தேதி இரவு முதல் மழை தொடங்கி 11ஆம் தேதி தீவிர மழை பொழிவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். உள் மாவட்டங்களில் டிசம்பர் 11ஆம் தேதி மிதமான மழை பெய்யும்.

டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் இந்த சலனம் தீவிரமடைந்து தமிழக கடற்கரையை நெருங்கி வரும் இந்த இரண்டு நாட்களில் நான்காம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். இதன் காரணமாக வடகடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் இந்த சலனத்தின் காற்று குவிதல் ஏற்படும் பகுதியில் அதீத கன மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது.

டிசம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழைக்கான வாய்ப்பு உள்ளது. வட கடலோரம் மாவட்டங்களில் மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஃபெஞ்சல் புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like