1. Home
  2. தமிழ்நாடு

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? பாஜகவினருக்கு சீமான் சவால்! பெண்களுக்கு ஆதரவாகவே திருமா பேசினார்!!

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? பாஜகவினருக்கு சீமான் சவால்! பெண்களுக்கு ஆதரவாகவே திருமா பேசினார்!!


மனு தர்ம நூலில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துக்களை, பொது மேடையில் விவாதிக்க நான் தயாராக உள்ளேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் மருதுபாண்டிய வீரர்களின் 219-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது தேர்தல் காலம் என்பதால் பாரதிய ஜனதா கட்சியில் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் துவங்கி விட்டோம். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெண்களுக்கு ஆதரவாகவே பேசினார். அவர் குஷ்புவுக்கும் ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளார் என கூறினார்.

மனு தர்ம நூல் குறித்து அதில் பெண்கள் பற்றி கூறப்பட்டு இருக்கக் கூடிய கருத்துக்களை குறித்து தான் பொது மேடையில் விவாதிக்க தயார் என்றும் தெரிவித்தார்.

சட்டம் இயற்றும் விவகாரத்தில், பொது மக்கள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு மதிப்பதில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

Trending News

Latest News

You May Like