1. Home
  2. தமிழ்நாடு

உலகத்திலேயே மோடி, அண்ணாமலை தான் சிறந்த நடிகர்கள் - மன்சூர் அலிகான்..!

1

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ‘’அண்ணாமலையை நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் அவர் என்ன அரசியல் செய்கிறார் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. கலவரம் உண்டுபண்ண வேண்டும். மக்களை பிளவுபடுத்த வேண்டும். இதுவே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தமிழகத்தை சீர்குலைக்க வேண்டும்; மதவெறிகாடாக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குஜராத்தில் எப்படி செய்தார்களோ.. புல்வாமாவில் எப்படி இவர்கள் செய்துவிட்டு சொன்னார்களோ அதைத்தான் இங்கு செய்ய நினைக்கிறார்கள். என்னை எல்லாரும் நடிகன் என்று கூறுகிறார்கள். நான் நடிகனே கிடையாது. இந்த உலகத்திலேயே நல்ல நடிக்க தெரிந்த 2 பேர் இருக்காங்க. ஒன்னு அண்ணாமலை; மற்றொருவர் மோடி.

மோடி அவர்கள் 2 கோடி வேலை வாய்ப்பு தருவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் நிறைவேறியிருக்கிறதா. தமிழகம் வஞ்சிக்கப்படுவது கவலையளிக்கிறது. முதலில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அந்தந்த மக்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வங்கி, அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், தனியார் இப்படி அனைத்துத் துறைகளிலும் என்னென்ன விகிதாசாரப்படி மக்கள் இருக்கிறார்களோ, அப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதீத நாட்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கிறவர்கள் விஆர்எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இது தான் கிளீன் இந்தியா. இது தான் சுத்திகரிக்கப்பட்ட இந்தியா.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், ஆளுநர் மாளிகையில் உள்ள 100 ஏக்கரில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும். ஆளுநர் பதவி ஒன்றுமில்லாதது; கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கையெழுத்து போடுவதை விட்டுவிட்டு அவர் விருப்பத்துக்கு செயல்படுகிறார்’’ என்றார்.

Trending News

Latest News

You May Like