1. Home
  2. தமிழ்நாடு

1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!

1

அண்மையில் திரிஷா குறித்து சர்ச்சைக்கு உரிய கருத்துகளை தெரிவித்து, அதன் காரணமாக பலத்த கண்டனத்துக்கும் காவல்துறை விசாரணைக்கும் ஆளானார் மன்சூர்அலிகான்.

அதற்காக பின்னர் மன்னிப்பு கோரினார். அவரை மன்னித்து விட்டதாக திரிஷாவும் அறிவித்தார்.

இந்நிலையில் மன்சூர்அலிகான் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக திரிஷாவிடம் விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம் அனுப்பியது.

அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் திரிஷா. மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என திரிஷா கேட்டுக் கொண்டதாக ஊடகத்தகவல் தெரிவிக்கிறது.

திரையுலகைச் சேர்ந்த சில நெருக்கமான நண்பர்கள் தெரிவித்த ஆலோசனையின் பேரிலேயே திரிஷா காவல்துறையிடம் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன், லியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு திரிஷாவுக்குப் புதுப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்த நேரத்தில் தேவையின்றி திரையுலகில் யாரையும் பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லையாம்.

இந்நிலையில், 1  கோடி நஷ்ட ஈடு கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக தலா ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

முழு வீடியோவையும் பார்க்காமல் தனது பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் முன்பு திங்களன்று விசாரணைக்கு வருகிறது.
 

 

Trending News

Latest News

You May Like