1. Home
  2. தமிழ்நாடு

வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்..! இங்க ஏன் பலாப்பழம் கருப்பா இருக்கு..?

1

லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் நடிகர் மன்சூர் அலி கான்.இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

வேலூர் சிட்டிங் எம்பியும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி, பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரை எதிர்த்து மன்சூர் அலிகான் களமிறங்கினார். மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வேலூர் தொகுதியில் முகாமிட்டு பலாப்பழம் சின்னத்துடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் தனது சின்னம் பொறிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் இல்லாததால் தனது பலாப்பழச் சின்னம் மறைக்கப்பட்டு இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டினார்.


கொணவட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டார். பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வெளிச்சம் போதிய அளவு இல்லாததால் வாக்களிக்க வரும் பொதுமக்கள் சரியான முறையில் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

மேலும், “வாக்களிக்கும் இயந்திரம் இரண்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் முதல் இயந்திரம் இருக்கும் பகுதியில் மட்டும் வெளிச்சம் நன்றாக தெரிகிறது. மற்றொரு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் தெரியவில்லை. உடனே இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like