ஓட்டலில் அசைவம் சாப்பிட்டவர் திடீர் மரணம்!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/0ebe41382e3c500a55b96cf42af67f42.webp?width=836&height=470&resizemode=4)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஓட்டல் ஒன்றில் அசைவ உணவு சாப்பிட்டு விட்டு தூங்கிய தர்மலிங்கம் எனும் தொழிலாளி, திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசைவ உணவைச் சாப்பிட்டு தூங்கிய தர்மலிங்கம், நீண்ட நேரமாகியும் எழவில்லை. அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை எழுப்பியபோது படுத்தபடியே அவர் இறந்து விட்டது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் தர்மலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.