1. Home
  2. தமிழ்நாடு

விமான எஞ்சினில் சிக்கிய நபர் உயிரிழப்பு..!

1

ஷிபோலில் உள்ள ஆம்ஸ்டர்டாம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டென்மார்க்கின் பில்லுண்ட் என்ற நகரத்திற்கு கேஎல்எம் என்கிற விமானம் 104 பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. விமானத்தில் முன்னால் உள்ள காற்றை உறிஞ்சி பின்னால் வெளியேற்றும் வகையில் ஜெட் எஞ்சின் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விமானத்தில் சுழன்று கொண்டிருந்த டர்பைன் எஞ்சினுக்குள் உறிஞ்சப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்போது பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனை நேரில் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர்.
 

உயிரிழந்த நபரின் அடையாளத்தை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. அவர் பயணியா, பணியாளரா அல்லது அருகில் இருப்பவரா என்று அவர்கள் கூறவில்லை. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவில்தான் விரிவான தகவல்கள் வெளியாகும் என்கிறார்கள் விமான நிலைய வட்டாரங்களில்.

அடுத்தடுத்து விமானம் தொடர்பான அரிதான விபத்துகள் நிகழ்ந்து வருவது நாடு முழுவதும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like