1. Home
  2. தமிழ்நாடு

காட்டு யானை தாக்கிய மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு..!

1

கோவை அட்டுகள் பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு வனப் பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க போது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் காயம் அடைந்தார். 

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின் வனப் பணியாளர்கள் ரங்கசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவரை காட்டு யானை தாக்கியது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like