1. Home
  2. தமிழ்நாடு

நாட்டையே உலுக்கிய சம்பவம் : ஓடும் ரயிலில் ஆண் சடலத்துடன் பாலியல் உறவில் ஈடுப்பட்ட நபர்..!

1

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜார்ஜ் கொன்சலஸ் (வயது 37) தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சுரங்கப்பாதை ரயிலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஜார்ஜ் கொன்சலஸ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, ஜார்ஜ் கொன்சலஸ் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் மதுப்பழக்கம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்வென்றால் கோன்சலஸ் இறந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதன்படி, மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது ஜார்ஜ் கொன்சலஸ் அமர்ந்து இருக்கும் ரயில் பெட்டியில் சந்தேகத்திடமாக ஆண் ஒருவர் சுமார் 8 மணியளவில் ரயில் ஏறியுள்ளார். பின்னர் சுமார் மூன்று மணி நேரம் கழித்து நள்ளிரவு 12:08 மணிக்கு ரயிலை விட்டு இறங்கும் காட்சிகள் ரயில் பெட்டியில் உள்ள கேமிராவில் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டனர்.இதனையடுத்து அவரின் புகைப்படத்தை கொண்டு விசாரணை மேற்கொண்டத்தில் புரூக்ளினைச் சேர்ந்த 44 வயது ஃபெலிக்ஸ் ரோஹாஸ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஃபெலிக்ஸ் ரோஹாஸ் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோன்சலஸின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை . தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like