1. Home
  2. தமிழ்நாடு

மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்..! மொத்தம் நான்கு தையல்கள்..!

Q

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டுவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது.

அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மேலும் அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். பொதுக்கூட்டங்களை நடத்தி அவரது கட்சி தயாராகி வருகிறது.

இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி இன்று நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான போட்டோவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் ‛‛நம்முடைய தலைவர் மம்தா பானர்ஜி தீவிர காயமடைந்துள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வீட்டில் கீழே விழுந்ததில் நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நெற்றி மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் நெற்றியில் தையல் இடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஸ்கேன் உள்ளிட்ட ஆய்வுகள் செய்யப்பட்டதில், அவரது நினைவாற்றலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவரது உடல்நிலை மற்றும் மனநிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் வலியுறுத்தியதுடன், அவர் வீடு செல்ல விருப்பம் தெரிவித்ததால் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Trending News

Latest News

You May Like