8 மாத கர்ப்பமாக இருந்த பிரபல மலையாள நடிகை மாரடைப்பால் மரணம்..!

மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையான பிரியா திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு வயது 35. இவர் மரணமடையும் போது எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை சக நடிகரான கிஷோர் சத்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பிரியாவின் குழந்தை தற்போது ஐசியுவில் இருப்பதையும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், ‘பிரியாவின் அம்மாவும் கணவரும் இந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீள்வார்கள் என்பது தெரியவில்லை. 35 வயது என்பது மரணத்திற்கான வயதே கிடையாது. விடை தெரியாத பல கேள்விகள் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என உருக்கமாகப் பிரியாவின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.