1. Home
  2. தமிழ்நாடு

மகா சிவராத்திரி 2025 : இன்று உங்கள் ராசிக்கு ஏற்ற பரிகாரங்கள்...!

1

மேஷ ராசி

மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு மகாசிவராத்திரி புனித தினத்தில், சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அபிஷேகம் செய்து வழிபட உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.


ரிஷப ராசி

ரிஷப ராசி சேர்ந்தவர்கள் மகா சிவராத்திரி நன்னாளில், சிவபெருமானுக்கு பாலபிஷேகம் மற்றும் தண்ணீரால் அபிஷேகம் செய்து, வெள்ளை நிற பூக்களை ஆர்ப்பரித்து வழிபாடு செய்ய அவரின் ஆசீர்வாதம் கிடைக்கும்.


மிதுன ராசி

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த புனிதமான மகா சிவராத்திரி தினத்தில் வில்வ இல்லையால் அர்ச்சனை செய்வதும், தேனாபிஷேகம் செய்வது நல்லது. இதனால் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.


கடக ராசி

கடக ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த மகா சிவராத்திரி தினத்தில், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்வது நல்ல பலனை தரும். இதன் மூலம் உங்களின் உடல் நலப் பிரச்சினைகள் தீரும். உங்கள் வாழ்க்கையில் மன அமைதி கிடைக்கும்.


சிம்ம ராசி

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் தேனாபிஷேகம், ருத்ராட்சம் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது நல்லது. இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். துன்பங்கள் விலகும்.


கன்னி ராசி

கன்னி ராசி சேர்ந்தவர்களுக்கு அற்புத நாளில் தாதுரா மலர் அர்ப்பணித்து வழிபாடு செய்வது நல்லது. இதனால் உங்களின் அனைத்து வேலைகளும் சிறப்பாக நிறைவேறுவதோடு, உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவும்.


துலாம் ராசி

துலாம் ராசி சேர்ந்தவர்கள் இந்த மகா சிவராத்திரி நாளில் சந்தனம், பாலில் சர்க்கரை கலந்து அபிஷேகம் செய்வது நல்லது. மேலும் பூக்களாலும், அட்சதையாலும் அர்ச்சனை செய்யவும். இதனால் உங்களின் வாழ்வில் அனைத்து வித சுகங்களும் கிடைக்கும்.


விருச்சிக ராசி

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு சிவப்பு சந்தனம் மற்றும் தேன் அபிஷேகம் செய்வது நல்லது. இதனால் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகி இனிமையான சூழல் நிலவும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.


தனுசு ராசி

தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த புனிதமான தினத்தில், சிவலிங்கத்திற்கு 21 வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பான பலனைத் தரும். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.


மகர ராசி

மகர ராசிக்கு இந்த அற்புத நாளில் சிவபெருமானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது நன்மை தரும். இதனால் உங்கள் வாழ்க்கையில் உள்ளம் பிரச்சனைகளும், உடல்நல கோளாறுகளும் தீரும்.


கும்ப ராசி

கும்ப ராசிக்கு இந்த மகா சிவராத்திரி புனித நாளில் சிவலிங்கத்திற்கு நீல தாமரை மலரை சமர்ப்பித்து வழிபாடு செய்யவும்.


மீன ராசி

மீன ராசி நண்பர்கள் தண்ணீரால் அபிஷேகம் செய்வதும், கடலை மாவால் செய்த லட்டுகளை சமர்ப்பித்து வழிபாடு செய்வது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

Trending News

Latest News

You May Like