பிரதமர் மோடிக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கேள்வி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/35faf9eabbff1bc21597f0507d4b5da7.jpg?width=836&height=470&resizemode=4)
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்செண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் கடந்தஆண்டு 19- தேதி நிச்சயதார்த்தம் ஆனது. இந்நிலையில், இன்று குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ம்தேதி வரை திருமணத்துக்கு முந்தைய விழா (Pre Wedding) நடைபெற்று வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில்உலகப் பணக்காரர்களான பில்கேட்ஸ் உள்ளிட்டோரும், ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த சூழலில், ஜாம்ஷெட்நகரே ஏதோ நியூயார்க் போல களைக்கட்டியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஜாம்நகர்விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் வந்து இறங்குவதற்காக 10 நாட்களுக்கு இந்த விமான நிலையத்திற்குசர்வதேச விமான நிலையம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தினரின் திருமண நிகழ்ச்சிக்காக ஒருஉள்ளூர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கிகாரம் கொடுப்பது எப்படி நியாயம் என்று பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளபதிவில், “மோடி அரசின் மெகா மொய். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.
6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு. ஆனால் மதுரையின் பல ஆண்டுகோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4-வது சர்வதேச விமான நிலையம் என்றுகேள்வி கேட்டவர்கள் தானே இவர்கள்” என தனது பதிவில் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.