1. Home
  2. தமிழ்நாடு

மதுரை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவனுக்கு உதவிய தாய் ?

மதுரை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவனுக்கு உதவிய தாய் ?


மதுரை சக்கிமங்கலம் சௌராஷ்ட்ரா காலனியில் மகாலிங்கம் - பகவதி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் 17 வயது மகன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

எதுவும் அறியாத சிறுமியின் பின்னால் சென்று அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 14 வயது சிறுமி காலையில் கல்மேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது அவரை பாதி வழியின் தடுத்து நிறுத்திய 17 வயது சிறுவன், மிரட்டல் விடுத்து வலுக்கட்டாயமாக தனது பைக்கில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மதுரை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவனுக்கு உதவிய தாய் ?

அதன் பிறகு சிறுமியை வீட்டில் அடைத்து வைத்த சிறுவனின் தாயார் பகவதி, என் மகனை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என சிறுமியை வற்புறுத்தியுள்ளார். ஆனாலும் இதற்கு சிறுமி மறுத்துள்ளார். அப்போத ஆத்திரம் அடைந்த பகவதி, அந்த சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன்பிறகு பகவதியின் 17 வயது மகன் , 14 வயது சிறுமியை தனி அறையில் பூட்டி வைத்து இரண்டு நாட்களாக வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதற்கு சிறுவனின் தாயார் உடந்தையாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவனுக்கு உதவிய தாய் ?

இதனிடையே மகளை காணவில்லை என சிறுமியின் பற்றோர் பதறி தேடிவந்தனர். பின்னர் மீண்டு வந்த சிறுமி பெற்றோரிடம் நடந்துள்ளதை கூறி அழுதுள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசாரிடம்  புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து , 17 வயது சிறுவனையும், அவரது தாயார் பகவதியைம் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like