மதுரை விமான நிலையத்தை கலீஜ் ஆக்கிய தற்குறிகள்... ப்ளூசட்டை மாறன் காட்டம்!!

மதுரைக்கு விமானத்தில் சென்ற நடிகர் விஜய் முதல் முறையாக செய்தியாளார்களை சந்தித்தார். அரசியல் கட்சித் தலைவர் என்பதை விட சினிமா நடிகரின் செய்தியாளர் சந்திப்பாகத் தான் அது இருந்தது.
நடிகர் விஜய் யை காண்பதற்காக அவருடைய ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பெரும் கூட்டம் கூடியதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஏராளமானோர் தங்கள் செருப்புகளைக் கூட விட்டுவிட்டு நெரிசலிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ப்ளூசட்டை மாறன், “கோவை விமான நிலையத்திற்கு அடுத்து.. இன்று மதுரை விமான நிலையத்தை கலீஜ் ஆக்கிய தற்குறிகள். பெற்றோர்கள் உழைப்பில் வாங்கித்தந்த செருப்புகள் கணிசமாக குவிந்து கிடக்கும் காட்சி. சினிமா நடிகரை காண வெறிபிடித்து அலையாமல்.. அமைதியாக பார்த்தால் என்ன கேடு?”என்று மிகவும் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்திற்கு அடுத்து.. இன்று மதுரை விமான நிலையத்தை கலீஜ் ஆக்கிய தற்குறிகள்.
— Blue Sattai Maran (@tamiltalkies) May 1, 2025
பெற்றோர்கள் உழைப்பில் வாங்கித்தந்த செருப்புகள் கணிசமாக குவிந்து கிடக்கும் காட்சி.
சினிமா நடிகரை காண வெறிபிடித்து அலையாமல்.. அமைதியாக பார்த்தால் என்ன கேடு?pic.twitter.com/WHwJrE0gI8
கோவை விமான நிலையத்திற்கு அடுத்து.. இன்று மதுரை விமான நிலையத்தை கலீஜ் ஆக்கிய தற்குறிகள்.
— Blue Sattai Maran (@tamiltalkies) May 1, 2025
பெற்றோர்கள் உழைப்பில் வாங்கித்தந்த செருப்புகள் கணிசமாக குவிந்து கிடக்கும் காட்சி.
சினிமா நடிகரை காண வெறிபிடித்து அலையாமல்.. அமைதியாக பார்த்தால் என்ன கேடு?pic.twitter.com/WHwJrE0gI8