1. Home
  2. தமிழ்நாடு

நவம்பர் 1 முதல் வால்பாறைக்கு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு..!

Q

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, தின்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஆகிய சுற்றுலா மையங்களில் E-PASS நடைமுறை அமல்படுத்தப்பட்டதைப்போல, வால்பாறையிலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளதால், அப்பகுதி இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் நீர்வளங்களை பாதுகாக்கும் வகையில், சுற்றுலா மேலாண்மை அவசியம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கட்டுப்பாடற்ற சுற்றுலா நடவடிக்கைகள், அப்பகுதியின் சூழலியல் சமநிலையை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாகவும், அதற்கான தடுப்பு நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது.

அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

நவம்பர் 1 முதல் E-PASS நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

வால்பாறை செல்லும் சாலைகளில் வாகன சோதனை மையங்கள் அமைத்து பிளாஸ்டிக் பொருட்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலா பயணிகளுக்கு பசுமை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்த வேண்டும்.

வால்பாறையில் தினசரி அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும்

ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் சில ஆண்டுகளாக E-PASS நடைமுறை செயல்படுகிறது. இதன் மூலம் தினசரி வரும் வாகன எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, போக்குவரத்து சிரமங்களை குறைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வால்பாறையில் நடைமுறை அமல்படுத்தப்பட்டால், அங்கு ஏற்படும் சாலை நெரிசல், பிளாஸ்டிக் மாசு, சுற்றுச்சூழல் சேதம் ஆகியவை குறைய வாய்ப்புள்ளது.

வால்பாறை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இனி முன்கூட்டியே இணையதளம் மூலம் E-PASS பெற வேண்டும். வாகன விவரங்கள், பயணிகள் எண்ணிக்கை போன்றவை பதிவுசெய்து மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதனால் கட்டுப்பாடற்ற சுற்றுலா தடுக்கப்பட்டு, பாதுகாப்பான, சீரான சுற்றுலா மேலாண்மை சாத்தியமாகும்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவு, வால்பாறை சுற்றுலா மையத்தின் இயற்கை வளங்களை காக்கும் முக்கியமான தீர்மானமாக கருதப்படுகிறது. அரசும், சுற்றுலா பயணிகளும், உள்ளூர்வாசிகளும் இணைந்து இதனை செயல்படுத்தினால், வால்பாறையின் பசுமையும், இயற்கை வளங்களும் நீடித்த பாதுகாப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like