மதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை.. இரவில் நடந்த பயங்கரம் !

மதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை.. இரவில் நடந்த பயங்கரம் !

மதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை.. இரவில் நடந்த பயங்கரம் !
X

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(47). மதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சிவக்குமாரின் வீடு அருகே அமர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (20) என்பவர் அடிக்கடி இரவு வேளையில் மது குடித்து வந்துள்ளார். இதனால் சிவக்குமார் குடும்பத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டின் அருகே மது அருந்தவேண்டாம் என மாரிமுத்துவை சிவக்குமார் கண்டித்துள்ளார். எனினும் இரவில் வழக்கம் போல் சிவகுமார் வீட்டின் அருகே அமர்ந்து மாரிமுத்து மது அருந்தியுள்ளார். அதைப் பார்த்த சிவகுமார் மாரிமுத்துவை வழக்கம்போல் கண்டித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து சிவக்குமாரை பின்புறமாக அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சிவக்குமார் சரிந்துவிழுந்தார். இதனையடுத்து மாரிமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

மேலும் அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சிவக்குமார் அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞர் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Next Story
Share it