1. Home
  2. தமிழ்நாடு

சென்னை அணி தோல்வி : 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி..!

1

லக்னோவில் 34வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ரச்சின் ரவீந்திர கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த கேப்டன் ருதுராஜ் தடுமாற்றமாக விளையாடி 17 (13) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் துவக்க வீரராக விளையாடிய அஜிங்க்ய ரஹானே 36 (24) ரன்களில் க்ருனால் பாண்டியா சுழலில் க்ளீன் போல்ட்டானார். அப்போது 4வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே 3, சமீர் ரிஸ்வி 1 ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தையும் பின்னடைவையும் கொடுத்தனர்.

அடுத்ததாக வந்த மொயின் அலி 3 சிக்சருடன் 30 (20) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் ஜாம்பவான் எம்எஸ் தோனி 3 பவுண்டரி 2 சிக்சருடன் 28* (9) ரன்கள் குவித்த நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் எதிர்புறம் கடைசி வரை அவுட்டகாமல் அசத்திய ரவீந்திர ஜடேஜா அரை சதமடித்து 57* (40) ரன்கள் அடித்ததால் 20 ஓவரில் சென்னை 176/6 ரன்கள் குவித்தது.

லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 177 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குவிண்டன் டீ காக் ஆகியோர் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். 

இந்த ஜோடி 15 ஓவர்களில் 134 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோவின் வெற்றியை உறுதி செய்தது. அப்போது டீ காக் அரை சதமடித்து 54 (43) ரன்களில் முஸ்தபிசூர் ரஹ்மான் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அசத்தலாக விளையாடிய ராகுல் 9 பவுண்டரி சிக்சருடன் 82 (53) ரன்கள் குவித்து ஜடேஜாவின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கேப்டனாக அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையையும் ராகுல் படைத்துள்ளார். இதற்கு முன் 2020 சீசனில் சென்னைக்கு எதிராக பெங்களூருவின் கேப்டனாக விராட் கோலி 90* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Trending News

Latest News

You May Like