1. Home
  2. தமிழ்நாடு

தனிமை வெறுப்பாக உள்ளது.. கொரோனா உறுதியான குஷ்பு ட்வீட்..!

தனிமை வெறுப்பாக உள்ளது.. கொரோனா உறுதியான குஷ்பு ட்வீட்..!


பிரபல நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா இரண்டு அலைகளுக்கு பிறகு இறுதியாக 3-வது அலையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி விட்டது. நேற்று மாலை வரை எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது.

ஆனால் தொடர்ந்து மூக்கில் சளி இருந்து கொண்டே இருந்தது. மீண்டும் ஒரு முறை சோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. அடுத்த 5 நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தனிமையில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது.

எனவே, என்னை ட்விட்டரில் தொடர்ந்து பொழுதை போக்க உதவுங்கள். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் போய் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.


Trending News

Latest News

You May Like