1. Home
  2. தமிழ்நாடு

ஆகஸ்ட் 3-ம் தேதி சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

1

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின்  நினைவு நாள் ஆகஸ்ட் 3 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதற்கு ஈடாக எதிர்வரும் 12 ம் தேதியன்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று சேலம், ஈரோடு ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகளும் இயங்காது.  அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பழையகோட்டை கிராமம் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.அதே வேளையில், அரசு பாதுகாப்புப் பணிக்கான அரசு அலுவல்களைக் கவனிக்கும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like