ரூ.5 கோடி வரை கடனுதவி! முதல் தலைமுறையினருக்கு தொழில் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பட்டதாரிகளை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில், "தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்" என்ற சிறப்பு கடனுதவி திட்டம் சென்னையில் செயல்படுத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பட்டதாரிகளை தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில், "தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்" என்ற சிறப்பு கடனுதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின்கீழ் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் கடன் பெற தகுதியாக கருதப்படும்.
மேலும், இந்த கடனைப் பெற குறைந்தபட்சம் கடந்த 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருந்ததல் குறிப்பாக, முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருப்பதும் அவசியம்.
இந்த கடன் திட்டத்தின்கீழ், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ.5 கோடியும் கடன் பெறலாம். கடன் தொகையில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
ஆர்வம் உள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 9597373548 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.