1. Home
  2. தமிழ்நாடு

பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்றது !! உற்சாகத்தில் வீரர்களூம் , ரசிகர்களும்.

பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்றது !! உற்சாகத்தில் வீரர்களூம் , ரசிகர்களும்.


இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்றது. இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையிலேயே லிவர்பூல் அணி பட்டத்தை கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி கிரிஸ்டல் பேலஸ் அணியை 4- 0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது .

பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு பட்டம் வென்றது !! உற்சாகத்தில் வீரர்களூம் , ரசிகர்களும்.

நடப்புச் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி நேற்று நடந்த ஆட்டத்தில் செல்சி அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. லிவர்பூல் அணியை விட மான்செஸ்டர் சிட்டி அணி 23 புள்ளிகள் பின் தங்கியதையடுத்து , லிவர்பூல் அணி பட்டத்தை கைப்பற்றியது.

தற்போது லிவர்பூல் அணி 31 ஆட்டங்களில் விளையாடி 86 புள்ளிகளை பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 7 ஆட்டங்களிலும் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றாலும், அந்த அணியால் 84 புள்ளிகளையே ஈட்ட முடியும்.

Trending News

Latest News

You May Like