1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் மதுக் கடைகளில் 90 மி.லி. ’கட்டிங்’ அறிமுகம்..!

1

மதுக் கடைகளில் 90 மி.லி. ’கட்டிங்’ மது பாட்டில்களை விற்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான அனுமதியையும் தமிழக அரசிடமிருந்து டாஸ்மாக் பெற்றுவிட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ஒருமுறை இதேபோல டெட்ரா பாக்கெட்களில் 90 மி.லி. அளவில் மது வகைகளை விற்கத் திட்டமிட்டுக் கடும் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் பாக்கெட்டுக்குப் பதிலாக பாட்டிலில் விற்கும் முடிவுக்கு வந்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், தீபாவளி முதல் விற்பனையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் இருப்பதிலேயே குறைந்த விலை மது பாட்டில் தற்போது ரூ.140-க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், 90 மி.லி. மது பாட்டில்கள் ரூ. 80-க்கு விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மது உற்பத்தியாளர்களைச் சந்தித்த பின் இதுதொடர்பான முடிவை எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக டாஸ்மாக்கில் மதுப் பிரியர்களில் ரூ.140-க்கு விற்கப்படும் குவாட்டர் (180 மி.லி.) பாட்டிலைக்கூட வாங்க முடியாத நிலையில் பலரும் இருப்பார்கள். இப்படி இருப்பவர்கள் கட்டிங் பிரித்துக் குடிக்க மதுக் கடைகளில் இன்னொரு ஆளைத் தேடுவதை கடை வாசல்களில் காண முடியும்.

தமிழக அரசு அறிமுகப்படுத்த இருக்கும் 90 மி.லி. ’கட்டிங்’ மது பாட்டில்கள் விற்பனைக்கு வந்த பிறகு, இனிமேல் குவாட்டர் வாங்க முடியாமல் காத்திருக்கும் மதுப் பிரியர்கள் பார்ட்னர்களைத் தேட வேண்டியிருக்காது. விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, அருகிலுள்ள மாநிலங்களில் இதுபோன்ற குறைந்த அளவு மதுவை ‘டெட்ரா பாக்கெட்டுகளில்’ அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், தமிழக டாஸ்மாக் நிர்வாகம் மலிவான விலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் வழங்க முடிவெடுத்துள்ளது 

Trending News

Latest News

You May Like