1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் கோவையில் மதுக்கடைகள் செயல்படாது.!

1

 மே 1ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினம்/மே தினமாக கொண்டப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பு, தியாகம், மற்றும் உரிமைகளை நினைவுகூறும் தினமான இந்த நாளில் மதுக்கூடங்கள் செயல்படாது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கூடங்களும் இந்த நாளில் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது.மே தினத்தையொட்டி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், பாா்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மது வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்றுள்ள தளங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிகளுக்கு முரணாக மே தினத்தில் மது விற்பனை செய்பவா்கள் மீதும் மது வகைகளை சட்ட விரோதமாக பதுக்கிவைத்திருப்பவா்கள், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்பவா்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like