1. Home
  2. தமிழ்நாடு

என் எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் மது பாட்டில்களா..? ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த வானதி ஸ்ரீனிவாசன்!

1

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் வானதி சீனிவாசன்.இவரது அலுவலகத்தை கார்ப்பரேட் விதிகளின்படி நடத்துவது; மக்களால் எளிதில் அணுகும்படியான அலுவலக சூழலை வைத்திருப்பது; மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காண்பது போன்றவற்றை செய்து வந்ததால் வானதி சீனிவாசனின் எம்எல்ஏ அலுவலகத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் கிடைத்தது. தமிழக்ததில் ஒரு எம்எல்ஏ அலுவலகத்திற்கு ஐஎஸ்ஓ சான்று கிடைப்பது இதுவே முதன்முறையாக இருந்தது.

அப்படி பெயர் வாங்கிய வானதி சீனிவாசனின் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் மலை போல உயர்ந்துவிட்டதாக கூறிய வானதி சீனிவாசசன், டாஸ்மாக்கில் கூட அனைத்து மது பாட்டில்களின் விலையும் அதிகரித்து விட்டதாக கவலையுடன் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், "மேடம்.. உங்கள் அலுவலகத்திற்குள் காலி மது பாட்டில்கள் சிதறி கிடக்கிறதே.. எப்படி இவை இங்கு வந்தது?" என்று நிருபர் கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்வியால் அதிர்ந்து போன வானதி சீனிவாசன், "என்னங்க சொல்றீங்க.. என் ஆபிசுக்குள் மதுபாட்டில்களா" எனக் கேட்டார். பின்னர் அருகில் இருந்த கட்சிக்காரர்களை பார்த்து, "தம்பிங்களா என்ன இதெல்லாம்" என அவர் கேட்டார். அதற்கு கட்சிக்காரர்கள் அவரிடம் ஏதோ கூறினர். இதையடுத்து, "பாத்தீங்களா.. கொஞ்ச நாள் ஆபிசை திறக்காமல் விட்டால் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து இப்படிப்பட்ட வேலையை செஞ்சு வெச்சிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள் திறக்காமல் இருந்தால், ஆபிசிஸ் கஞ்சா விற்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு ஆக்கிவிடுவார்கள் போல" என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like