1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! இன்று முதல் இதெல்லாம் மாற போகுது..!

1

அக்.1 முதல் அரசு சார்பில் விதிக்கப்படும் இந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து அறிந்துகொள்வது, பல தடுமாற்றங்களை தவிர்க்க உதவும்.

  • நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்.
  • வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்பாடு ரூ. 7 லட்சத்தை தாண்டினால் 20 சதவீதம் டிசிஎஸ் செலுத்த வேண்டும். ஆனால் இந்தச் செலவு மருத்துவம் மற்றும் கல்விக்கு என்றால், டிசிஎஸ் 5 சதவீதம் மட்டுமே இருக்கும்.
  • வெளிநாட்டு கல்விக்கடன்: வெளிநாட்டில் உயர்கல்வி பெற விரும்புவோர் பெறும் கடன்தொகை ரூ7 லட்சத்தைவிட அதிகமாக இருப்பின் 0.5 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும்
  • ரூ.2 ஆயிரம் நோட்டுகள்: ரூ2 ஆயிரம் நோட்டுகளை வங்கியில் செலுத்த அல்லது மாற்றிக்கொள்ளவதற்கான அவகாசம் அக்டோபர் 7 உடன் முடிகிறது.
  • பங்குச்சந்தை சார்ந்த டிமேட் கணக்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பான கேஒய்சி நடைமுறைகள் அக்டோபர் முதல் மேலும் இறுகுகின்றன. வாரிசுதாரர் சேர்க்கப்படாத மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிமேட் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும். அவற்றுடனான பரிவர்த்தனைகள் தடைபடுவதால் புதிதாக பங்குகளை வாங்கவோ, இருப்பில் உள்ளதை விற்கவோ முடியாது போகும்.
  • பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.
  • பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை: கோயில் வளாகங்களில் செல்போன் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கும் கோயில்களின் பட்டியலில் பழனி முருகன் கோயிலும் சேர்கிறது.
  • அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசுப் பணிகளுக்கு ஆதாருடன் பிறப்புச் சான்றிதழும் கட்டாயமாக்கப்படுகிறது. இனி, அரசு வேலைகளுக்கு ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஒரே ஆவணமாக இருக்கும்.
  • ரேஷன் கடை, ஓட்டுநர் உரிமம், பத்திரப்பதிவு, பள்ளி/கல்லூரிகளில் சேர்க்கை, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளிலும் இனி பிறப்பு சான்றிதழை பிரதான ஆவணமாக பயன்படுத்தலாம்.
  • ஆன்லைன் விளையாட்டு: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி இனி 28 சதவீதமாக வசூலிக்கப்படும்.
  • குடிநீர் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே: அக்டோபர் முதல் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட மாநகராட்சி சேவைக்கான வரிகள் மற்றும் கட்டணங்களை இனி ரொக்கமாக செலுத்த இயலாது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் காசோலை மற்றும் வரைவோலை மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.

Trending News

Latest News

You May Like