1. Home
  2. தமிழ்நாடு

இதை தெரிஞ்சிக்கோங்க..! எந்த பிள்ளையார் என்னென்ன பலன் தருவார் தெரியுமா ?

1

எந்த ஒரு பூஜையாக இருந்தாலும்,மஞ்சளில் பிடித்து வைத்தாலும் விநாயகருக்கு உண்டான மரியாதை அந்த மஞ்சளுக்கும் கிடைத்து விடும். மஞ்சளைப் போன்று வேறு எந்தப் பொருளில் பிள்ளையார் பிடித்து வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.  

1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

2.குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.

3.புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்

4.வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.

5. உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

6.வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.

7.விபூதியார் வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்

8.தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

9.சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்

10. வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்

11.வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்

12.சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோயின் வீரியம் குறையும்.

Trending News

Latest News

You May Like