1. Home
  2. தமிழ்நாடு

ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்..!ஆந்திராவில் இன்று ஒரே கட்ட தேர்தல்..!

1

பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனை நிலவுகிறது. ஆந்திராவில் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது. இறுதி நாளில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கர்னூல் மற்றும் சித்தூரில் பிரச்சாரம் செய்தார். கொட்டும் மழையிலும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், அவர் போட்டியிடும் பிதாபுரம் தொகுதியிலும், காக்கிநாடா தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.

பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா திருப்பதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி,ஒய்.எஸ். சர்மிளாவுடன் இணைந்து கடப்பாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அமைச்சர் ரோஜா, நகரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த தேர்தலில் 25 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 454 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 417 ஆண் வேட்பாளர்களும் 37 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் .

இதே போல் 175 சட்டமன்ற தொகுதிக்கு 2,387 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 2154 ஆண் வேட்பாளர்களும் 231 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். ஆந்திராவில் உள்ள 26 மாவட்டங்களில் 46 ஆயிரத்து 389 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,438 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 34 ஆயிரத்து 651 வாக்குவா சாவடி மையங்களில் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளது. ஆந்திராவில் 4 கோடியே 14, 187 வாக்காளர்கள் உள்ளனர். துணை ராணுவம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ், பா.ஜ.க., பி.ஆர்.எஸ். கட்சி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 475 ஆண் வேட்பாளர்களும் 50 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 

35 ஆயிரத்து 88 வாக்குச்சாவடி மையங்கள் தேர்தல் பணியில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பணியமத்தப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள 13 தொகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இங்கு இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படுகிறது.

தெலுங்கானாவில் 3 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள மது கடைகள் மதுபான கூடங்கள் நேற்று முன்தினம் முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதே போல் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள தமிழக டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like