1. Home
  2. தமிழ்நாடு

மக்களே தெரிஞ்சிக்கோங்க..! மே 1 தேதி முதல் அமலுக்கு வரும் நடைமுறைகள்..!

1

சிலிண்டர் விலை:


ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். அதேபோல், மே 1 ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், இன்னும் சில முக்கிய நடைமுறைகளிலும் மாற்றம் வரலாம் என்று கூறப்படுகிறது.

ATM அதிக கட்டணம்:


மே 1 முதல் ATM பயன்படுத்தும் நபர்கள் அதிக கட்டணம் செலுத்த தயாராக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கி ATM கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, வேறொரு வங்கியின் ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17-ல் இருந்து ரூ.19 ஆக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையை தாண்டினால், மே 1 முதல் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும்.

ரயில் டிக்கெட்:


ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சகம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, காத்திருப்பு டிக்கெட்டில் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது. முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல் மற்றும் உடனடி ஒதுக்கீடு கட்டணங்களும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


GNSS கட்டணம் முறை:


சுங்கச்சாவடிகளில் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலிக்கும் GNSS முறை சோதனை ஓட்ட முறையில் அமலுக்கு வருகிறது. இந்த சோதனை முறை வெற்றி பெற்றால் நாடு முழுவதும் செயல்படுத்தபடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like