1. Home
  2. தமிழ்நாடு

கசிந்தது நீட் வினாத்தாள்: 8 பேர் கைது - வினாத்தாள் விலை எவ்வளவு தெரியுமா..?

கசிந்தது நீட் வினாத்தாள்: 8 பேர் கைது - வினாத்தாள் விலை எவ்வளவு தெரியுமா..?


இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்ப்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூரில், ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு தொடங்கியதும் தேர்வு அறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர், வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர்.

அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி, அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க, அதை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங், தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, 35 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு, தேர்வு மைய வளாகத்திலேயே 10 லட்சம் ரூபாய் கைமாறி உள்ளது. இதையடுத்து, தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like