1. Home
  2. தமிழ்நாடு

பெண்களே உஷார்.. தொழிலதிபர் வேடத்தில் உலா வரும் மோசடி மன்னன் !

பெண்களே உஷார்.. தொழிலதிபர் வேடத்தில் உலா வரும் மோசடி மன்னன் !


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி 4 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீடு, பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தொழிலதிபர் தலைமறைவானதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அசோக் நகரை சேர்ந்த காஞ்சனா, அரும்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தி, தி.நகரை சேர்ந்த தாட்சாயிணி, போரூரை சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகயோர் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். இவர்கள் நான்கு பேரும் ஒரே நபர் மீது புகார் அளித்ததால் கமிஷனர் அலுவலக காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்களே உஷார்.. தொழிலதிபர் வேடத்தில் உலா வரும் மோசடி மன்னன் !

இதனிடையே, காஞ்சனா என்ற பெண் அளித்த புகாரில், தனது வீட்டின் கீழ் தளத்தில் ஆனந்தராஜ் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு வாடகைக்கு அலுவலகம் நடத்தி வந்தார். பின்னர், என்னை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். மேலும், தனியாக தொழில் செய்ய வேண்டும் என்று கூறி எனது வீட்டை கிரையம் எழுதி வாங்கினார். பிறகு என்னைவிட்டு விலகிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனயும் கூறியிருந்தார்.

பாக்கியலட்சுமி அளித்த புகாரில், என்னை ஆனந்தராஜ் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால், திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுபற்றி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, 2020ம் ஆண்டு வடபழனி கோயில் என்னை திருமணம் செய்தார். பின்னர், என்னிடம் 10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

பெண்களே உஷார்.. தொழிலதிபர் வேடத்தில் உலா வரும் மோசடி மன்னன் !

இதேபோல் மற்ற இரு பெண்களிடமும் தனித்தனியே பழகி திருமண ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடுமட்டுமல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். நான்கு பெண்கள் அளித்த புகார் தொடர்பாக தொழிலதிபர் ஆனந்தராஜ் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like