பெண்களே சிவப்பு நிற பட்டன் ஒரே அழுத்து... இனி குற்றவாளிகள் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது..!
தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஆபத்து காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) மொபைல் செயலியை அனைத்துப் பெண்களும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்’ என்ற பட்டனை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்து கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த செயலியை Google Play Store, App Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அமைச்சர் கோவி செழியன் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில்…
— Govi Chezhian (@Govichezhian) December 27, 2024