1. Home
  2. தமிழ்நாடு

குவைத் தீவிபத்து: தமிழர்கள் உயிரிழப்பு 7ஆக அதிகரிப்பு..!

1

குவைத்தில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் ஜூன் 12ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதில் கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகம்மது ஷரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகிய ஐந்து தமிழர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோர தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கையானது 7 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Trending News

Latest News

You May Like