இப்படி கூட நடக்குமா?குர்குரேவுக்காக விவாகரத்து கோரும் மனைவி..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/32ac44713fdcff573073a850e49f8456.jpg?width=836&height=470&resizemode=4)
மனைவிக்கு குர்குரே பிடிக்கும் என்பதால் தினமும் வீட்டிற்கு போகும்போது அதனை வாங்கிச் செல்வதை கணவர் வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் ஒரு நாள் மறந்து விட்டுச் சென்றதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த மனைவி, வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் விவாகரத்து கோரி தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது
தினமும் நொறுக்குத் தீனிகளை உண்ணும் தனது மனைவி குர்குரேக்கு அடிமையாகி வருவது கவலையளிப்பதாக கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவியோ மாறாக, கணவர் தன்னை அடிப்பதால், தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
.