`நேர்மை'க்கு குவியும் பாராட்டுக்கள்...!

ஹைதராபாத்தைச் சேர்ந்த நித்திஷ் என்பவர் தன் பையை ஆட்டோவிலேயே மறந்து விட்டுச்சென்றுள்ளார்.
இதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ,பையில் 40 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த டேப் இருப்பதை கண்டு ,உடனடியாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் . ஆட்டோ ஓட்டுநரின் இந்த நேர்மையான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தனது ஆட்டோவில் பயணித்த நித்திஷ் என்பவர் தவற விட்டுச் சென்ற ₹25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகளை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் சரவணனின் நேர்மையான செயலுக்காக சென்னை காவல் ஆணையர் அருண், இவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
பயணி தவறவிட்ட 40 பவுன் நகை... ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் - `நேர்மை'க்கு குவியும் பாராட்டுக்கள்#Chennai #AutoDriver #TNPolice pic.twitter.com/aAOK1DZ80x
— Thanthi TV (@ThanthiTV) February 16, 2025