1. Home
  2. விளையாட்டு

தொடர் தோல்வி.. இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகிறார் கே.எல் ராகுல்?

தொடர் தோல்வி.. இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகிறார் கே.எல் ராகுல்?

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான் இன்று இந்தியா முழுவதும் பேச்சு. இப்போட்டியில் இந்தியா தோற்றது. அதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்தியா தோற்று கிட்டதட்ட அரையிறுதி வாப்பை இழந்தது.

இந்திய கிரிக்கெட் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட மனச்சோர்வே இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தொடர் தோல்வி.. இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகிறார் கே.எல் ராகுல்?

அதோடு விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் குறித்தும் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே, உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் கூறியுள்ளன.

மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.எல்.ராகுல் தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like