இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட கெனிஷா பிரான்சிஸ்..!

கெனிஷா பிரான்சிஸுக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு பலாத்கார மிரட்டல், கொலை மிரட்டல் வந்ததை பார்த்த கெனிஷா பிரான்சிஸ் அத்தகையவர்களை எச்சரித்து சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்.
அதாவது தன்னை மோசமாக விமர்சித்து வெளியான வீடியோக்கள், செய்திகள், போஸ்ட்டுகளை எல்லாம் 48 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும் என கெடு விதித்திருக்கிறார் கெனிஷா. நேற்று மாலை வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டார் அவர்.
இந்நிலையில் இன்று இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரி போட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
கடவுள், ஐடியாக்கள், வளர்ச்சி, பணம், கனவுகள், குறிக்கோள்கள் பற்றி பேசும் இடத்தில் இருங்கள். மக்களை பற்றி அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டா ஸ்டோரி மூலம் அவ்வப்போது விளக்கம் அளித்து வரும் கெனிஷா இப்படியொரு இன்ஸ்டா ஸ்டோரி போட்டிருக்கிறார் என்றால் நிச்சயம் காரணம் இருக்கும். அடுத்தவர்களை பற்றி பேசாமல் இருக்கவும் என்கிறார் கெனிஷா என அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து பெற நான் காரணமே இல்லை. சொல்லப் போனால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்த பிறகு தான் எனக்கு தெரபி கொடுக்க முடியுமா என ரவி மோகன் என்னிடம் கேட்டார். அவர் கேட்டதும் நான் ஒப்புக் கொள்ளவில்லை என கெனிஷா பிரான்சிஸ் முன்பு தெரிவித்தார்.
மேலும் என்னை பற்றி தெரிவிக்கப்பட்ட ஒரு பொய்யை அனைவரும் நம்பிக் கொண்டு அதை உண்மை என்று நினைத்து விமர்சிப்பது சரியல்ல என்றார் அவர். ஆர்த்தி கடைசியாக வெளியிட்ட அறிக்கையில், தனக்கும் கணவருக்கும் இடையே மூன்றாவது நபர் வந்ததாக குறிப்பிட்டார்.
ரவி மோகனின் வாழ்க்கையின் ஒளி தங்கள் திருமண வாழ்க்கையில் இருளை கொண்டு வந்தது என தான் கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அவர். முன்னதாக அறிக்கை வெளியிட்ட ரவி மோகனோ, கெனிஷா தன் தோழி, கம்பானியன், ஒளியை கொண்டு வந்தவர் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஆர்த்தியும் ஒளியை பற்றி பேசவே அந்த ஒளி கெனிஷா பிரான்சிஸ் தான் என்று சமூக வலைதளங்களில் அவரை மோசமாக விமர்சிக்கத் துவங்கினார்கள். ஆர்த்தி அறிக்கை வெளியிட்ட பிறகு உண்மை நிச்சயம் வெளியே வரும் என இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்தார் கெனிஷா.
மேலும் நான் உன்னிடம் சரண் அடைந்துவிட்டேன். என்னை விமர்சிப்பவர்களை நீயே பார்த்துக் கொள் கடவுளே என்றும் இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். தான் தவறு செய்ததாக நினைத்தால் தன்னை தண்டிக்குமாறும் கடவுளிடம் கூறினார் கெனிஷா.