1. Home
  2. தமிழ்நாடு

“களத்திலேயே பணியை தொடருங்கள், உங்களோடு நானும் நிற்கிறேன்” : முதலமைச்சர் அதிரடி!!

“களத்திலேயே பணியை தொடருங்கள், உங்களோடு நானும் நிற்கிறேன்” : முதலமைச்சர் அதிரடி!!


மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றிடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சென்னை, திரு.வி..நகர் மண்டலம், டிமெலஸ் சாலை, பட்டாளம் மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் கொட்டும் மழையில் சென்னை, தியாகராய நகர், விஜயராகவாச்சாரி சாலைப் பகுதிகளில் கால்வாயில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

“களத்திலேயே பணியை தொடருங்கள், உங்களோடு நானும் நிற்கிறேன்” : முதலமைச்சர் அதிரடி!!

மேலும், ஜி.என். சாலை, பசுல்லா சாலை மற்றும் திருமலை சாலை ஆகிய பகுதிகளில் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை கொட்டும் மழையில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட முதலமைச்சர்சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள்.


இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்! எனத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like